
புதுச்சேரி, புதுவை தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுக முகத்துவாரம் பகுதியில் மணல் திட்டுகள் உருவாகி உள்ளன. இதனால் துறைமுகத்தில் இருந்து கடலுக்குள் சென்று வரும் படகுகள் மணல் திட்டுகளில் மோதி சேதம் அடைகின்றன. எனவே மீனவர்கள் துறைமுக முகத்துவாரத்தை தூர்வார வேண்டும், கடலின் இருபுறமும் 500 மீட்டர் தூரத்திற்கு கற்களை கொட்டி ஆழப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி எந்திர விசைப்படகு உரிமையாளர்கள் சங்கத்தினர் கடந்த 10–ந் தேதி முதல் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லாமல் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்தநிலையில் நேற்று காலை 18 மீனவ கிராம விசைப்படகு, பைபர் மற்றும் கட்டுமர படகு உரிமையாளர்கள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தேங்காய்திட்டு துறைமுக வாசலில் ஒன்று கூடினர். அங்கு அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். Read More